உள்ளூர் செய்திகள்

குடும்ப தகராறில் குழந்தையுடன் தாய் மாயம்

Published On 2023-04-13 15:39 IST   |   Update On 2023-04-13 15:39:00 IST
  • கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
  • மனமுடைந்து காணப்பட்ட பிரவீனா தனது குழந்தையுடன் கடந்த 8-ந்தேதி அன்று வீட்டில் இருந்து மாயமானார்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள நாப்பினாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது42). இவரது மனைவி பிரவீனா (30). இவர்களுக்கு 6 வயதில் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று வீட்டில் மீண்டும் தகராறு நடந்தது.

இதில் மனமுடைந்து காணப்பட்ட பிரவீனா தனது குழந்தையுடன் கடந்த 8-ந்தேதி அன்று வீட்டில் இருந்து மாயமானார். இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கும் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.

இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான அவர்களை தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News