உள்ளூர் செய்திகள்

திருவெண்ணைநல்லூரில் வேலைக்குச் சென்ற தாய்- மகள் மாயம்

Published On 2022-09-27 07:28 GMT   |   Update On 2022-09-27 07:28 GMT
  • அன்னபூரணி தாய் பிச்சையம்மாளுடன் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளனர்.
  • பிச்சையம்மாள் மகள் அன்னபூரணி வேலை முடிந்து வீடு திரும்பவில்லை.

விழுப்புரம்:

திருவெண்ணைநல்லூர் அருகே சாராயமேட்டுப் பகுதியைச் சேர்ந்தவர் குமார் இவரது மனைவி பிச்சையம்மாள் (வயது 47). அவரது மகள் அன்னபூரணி. ( 22). இவருக்கு செல்வகணபதி என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் அன்னபூரணி தாய் பிச்சையம்மாளுடன் திருவெண்ணைநல்லூர் அருகே ஆலங்குப்பம் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற பிச்சையம்மாள் மகள் அன்னபூரணி வேலை முடிந்து வீடு திரும்பவில்லை. இதனால் மனைவி மற்றும் மகளை காணவில்லை என்று குமார் இவர்கள் வேலை பார்க்கும் ஆலங்குப்பம் சூப்பர் மார்க்கெட் சென்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் வேலை முடிந்து சென்று விட்டனர். வேறு எங்கு சென்றனர் என்று தெரியாது என்று கூறினர். மேலும் மனைவி மற்றும் மகளை பல்வேறு இடங்களில் தேடியும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து குமார் திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் வழக்கு பதிவு செய்து அவர்கள் என்னானார்கள் எங்கு சென்றார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News