உள்ளூர் செய்திகள்

சின்னசுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதை படத்தில் காணலாம்.

தொடர்மழையால் சின்னசுருளியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

Published On 2022-10-20 10:58 IST   |   Update On 2022-10-20 10:58:00 IST
  • தொடர் கனமழையால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
  • இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வருசநாடு:

தேனி மாவட்டம் வருசநாடு கோம்பைத்தொழு அருகே மேகமலை மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சின்னச் சுருளி அருவிருக்கு தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இந்த அருவி மேகமலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே அருவிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் வனத்துறையிடம் அனுமதி பெற்று வருகின்றனர். கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் அருவியில் நீர்வரத்து குறைந்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வந்தது.

இந்நிலையில் தொடர் கனமழையால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News