உள்ளூர் செய்திகள்
மொபட் - மோட்டார் சைக்கிள் மோதல் ; முதியவர் பலி
- கடைவீதி சென்று விட்டு தனது வீட்டுக்கு மொபட்டில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
- காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காங்கயம் :
நத்தக்காடையூர் அருகே உள்ள எழுமாத்தூர் தோட்டத்தை சேர்ந்தவர் நாச்சிமுத்து (வயது 73). விவசாயி. முதியவரான இவர் நத்தக்காடையூர் கடைவீதி சென்று விட்டு தனது வீட்டுக்கு மொபட்டில் திரும்பி வந்து கொண்டிருந்தார். இவர் நத்தக்காடையூர் - முத்தூர் சாலை முதிபாறை என்ற இடத்தின் அருகே வந்த போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மொபட் மீது மோதியது.
இந்த விபத்தில் அடிபட்டு பலத்த காயம் அடைந்த நாச்சிமுத்துவை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் நாச்சிமுத்து வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றி காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.