உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

திண்டுக்கல் அருகே மாயமான வாலிபர் பிணமாக மீட்பு

Published On 2023-06-04 07:30 GMT   |   Update On 2023-06-04 07:30 GMT
  • வீட்டை விட்டு வெளியே சென்ற வாலிபர் இரவு வெகு நேரம் ஆகியும் வீட்டுக்கு திரும்பவில்லை.
  • மாயமான வாலிபர் கிணற்றில் பிணமாக இறந்து கிடந்ததால் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகே பொன்மாந்துறை நல்லேந்திர புரத்தைச் சேர்ந்தவர் நாட்ராயன். கூலித்தொழி லாளி.இவரது மகன் கவுதம புத்தர் (வயது 18). இவர் மனநலம் பாதிக்க ப்பட்டவர் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று சுமார் மாலை 5 மணி அளவில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் இரவு வெகு நேரம் ஆகியும் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தனர்.பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் இன்று காலை அவரது வீட்டின் அருகே உள்ள 40 அடி ஆழமும், 30 அடி தண்ணீரும் உள்ள கிணற்றில் வாலிபர் பிணமாக மிதந்தார். இது குறித்து திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. அதன் பேரில் திண்டுக்கல் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் சிவக்கு மார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டனர்.

இதையடுத்து தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் அருண் நாரா யணன்,ஏட்டு கருணாகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர் மாயமான கவுதம புத்தர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டு க்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News