உள்ளூர் செய்திகள்

ரூ.100 கோடி மதிப்பீட்டில் வெள்ள தடுப்பு பணிகள்- அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டினார்

Published On 2022-06-23 15:22 GMT   |   Update On 2022-06-23 15:22 GMT
  • குன்றத்தூர் போரூர் ஏரி அருகே வெள்ள ரூ.100 கோடி மதிப்பீட்டில் தடுப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
  • நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.ஆர்த்தி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் படப்பை ஆ.மனோகரன் பங்கேற்பு

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் போரூர் ஏரி அருகே ரூ.100 கோடி மதிப்பீட்டில் வெள்ள தடுப்பு பணிகளை தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.ஆர்த்தி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் படப்பை ஆ.மனோகரன், குன்றத்தூர் ஒன்றியச் செயலாளர் ஏ.வந்தேமாதரம், திருவள்ளுவர் கொசஸ்தலையாறு வடிநில கோட்ட நீர்வள ஆதாரத் துறை செயற்பொறியாளர் சி.பொதுப்பணி திலகம் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News