உள்ளூர் செய்திகள்

இலத்தூர் ஒன்றியத்தில் நலத்திட்ட உதவிகள்- அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

Published On 2022-06-24 21:39 IST   |   Update On 2022-06-24 21:39:00 IST
  • வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
  • காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல்நாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டம், இலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சி முகமை மற்றும் பல்வேறு அரசு துறைகள் சார்பாக அரசு நலத்திட்ட உதவிகளை தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல்நாத், சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர், மு.பாபு, எஸ்.எஸ்.பாலாஜி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் செம்பருத்தி துர்கேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News