உள்ளூர் செய்திகள்

விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  மருத்துவ உபகரணங்களை  வழங்கினார். 

கடலூர் கிழக்கு மாவட்ட மருத்துவர் அணி சார்பில் அரசு மருத்துவமனைகளுக்கு உபகரணங்கள்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்

Published On 2023-09-16 09:21 GMT   |   Update On 2023-09-16 09:21 GMT
  • இதற்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர்‌ டாக்டர்‌ கமலக்கண்ணன்‌ தலைமை தாங்கினார்‌.
  • முடிவில் தொகுதி அமைப்பாளர் டாக்டர்‌ கார்த்திக்கேயன்‌ நன்றி கூறினார்.

கடலூர்:

கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்ட மருத்துவர் அணி சார்பாக மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா நடை பெற்றது. இவ்விழாவில் வேளா ண்மை துறை அமைச்ச ரும், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரு மான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கலந்து கொண்டு முட்டம் ஆரம்ப சுகாதார நிலை யத்தில் கூடுதல் மருத்துவ உபகர ணங்களை வழங்கினார். இதற்கு மாவட்ட மருத்து வர் அணி அமைப்பாளர் டாக்டர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார்.

மாவட்ட மருத்துவ அணி தலைவர் டாக்டர். ராமச் சந்திரன் வரவேற்றார். தொகுதி அமைப்பாளர்கள் டாக்டர்கள் கடலூர் கலைக் கோவன், சிவசெந்தில், கிருஷ்ணராஜ், வசந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட துணை அமைப்பாளர் டாக்டர்கள் அவினாஷ், அருண், மாவட்டத் துணைத் தலைவர் செல்வம், வடி வேலன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் முட்டம், வடலூர், கடலூர் புதுப்பாளையம், புதுச்சத்திரம், புவனகிரி, கிருஷ்ணாபுரம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்க ளுக்கு மருத்துவ உபகர ணங்கள் வழங்கப் பட்டது. முடிவில் தொகுதி அமைப்பாளர் டாக்டர் கார்த்திக்கேயன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News