உள்ளூர் செய்திகள்
தாராபுரத்தில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் நிகழ்ச்சி
- எம்.ஜி.ஆரின் 35-ம்ஆண்டு நினைவு நாள் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் அனுசரிக்கப்பட்டது.
- புறநகர்மாவட்ட செயலாளர் டி.டி.காமராஜ் தலைமையில் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
தாராபுரம் :
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 35-ம்ஆண்டு நினைவு நாள் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் அனுசரிக்கப்பட்டது. திருப்பூர் புறநகர்மாவட்ட செயலாளர் டி.டி.காமராஜ் தலைமையில் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தண்டபாணி,அவைத்தலைவர் வெங்கிடுபதி,ஜிம் பாலகிருஷ்ணன்,தனலட்சுமி தங்கவேல்,பொன்னி கார்த்திகேயன்,பூங்கொடி ஜெயராஜ்,தாஜ் ஜாபர் சாதிக், பொன் செல்லத்துரை,கே.எஸ்.கே.ஜவகர்,அம்மன் ஆர்.பாலகிருஷ்ணன், கோட்டை குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.