உள்ளூர் செய்திகள்

மேட்டூர்,ஏற்காட்டில் கன மழை

Published On 2022-10-06 06:31 GMT   |   Update On 2022-10-06 06:31 GMT
  • சேலம் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று பரவலாக மழை பெய்தது.
  • அதிக பட்சமாக 40 மி.மீ. பதிவு

சேலம்:

சேலம் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று பரவலாக மழை பெய்தது. குறிப்பாக மேட்டூரில் நள்ளிரவில் தொடங்கிய மழை 2 மணி நேரத்திற்கும் மேலாக கன மழையாக நீடித்தது.

இதே போல ஏற்காட்டில் 12.30 மணிக்கு தொடங்கிய மழை 2 மணி நேரம் கன மழையாக கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது . மழையை தொடர்ந்து ஏற்காட்டில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. மழையை தொடர்ந்து ஏற்காட்டில் 2 மணி நேரம் மின் தடை எற்பட்டது. இதனால் மக்கள்கடும் அவதிப்பட்டனர்.

சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, ஜங்சன், கொண்டலாம்பட்டி என பெரும்பாலான பகுதிகளில் இன்று அதிகாலை 2 மணியளவில் பரவலாக மழை பெய்தது . இந்த மழையால் மாநகரின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

மாவட்டத்தில் அதிக பட்சமாக மேட்டூரில் 40.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது . ஏற்காடு 30.4, சேலம் 16.5, காடையாம்பட்டி 10, எடப்பாடி 8 , ஓமலூர் 8, ஆனை மடுவு 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 114.10 மி.மீ.மழை பெய்துள்ளது.

Tags:    

Similar News