உள்ளூர் செய்திகள்

நத்தம் சாலையில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்

திண்டுக்கல்லில் மனநலம் பாதித்த பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் குடிமகன்கள்

Published On 2022-08-20 07:06 GMT   |   Update On 2022-08-20 07:06 GMT
  • திண்டுக்கல் மாவட்டத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சுற்றி திரிந்து வருகிறார்கள்.
  • மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரியும் இளம் பெண்களை இரவு நேரங்களில் ஒரு சில சமூக விரோதிகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் மாவட்டத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சுற்றி திரிந்து வருகிறார்கள்.மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள இவர்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து ரெயில்களிலோ, பஸ்களிலோ ஏறி திண்டுக்கல் பஸ் நிலையம், நாகல் நகர், ரெயில்வே நிலையம், பழைய கரூர் சாலை, பழனி சாலை ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் சுற்றி திரிகின்றனர்.

இவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் இவர்களுடைய குடும்பத்தினர் எங்கு இருக்கிறார்கள் என்பதை கண்டறிவதில் சிரமம் ஏற்படுகிறது.அவ்வாறு மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களோ அல்லது நண்பர்களோ எதேச்சையாக அவர்களை பார்க்க நேரும்போது, குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து மீட்டு செல்கிறார்கள்.

மற்றபடி இதுபோன்றவர்களை அவர்களுடைய குடும்பத்தினரிடம் சேர்ப்பது சவாலான காரியமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரியும் இளம் பெண்களை இரவு நேரங்களில் ஒரு சில சமூக விரோதிகள் மது மற்றும் கஞ்சா போதையில் இவர்களை பாலியல் பலாத்காரம் செய்வதும் தொடர்கதையாக உள்ளது.

ஆகவே மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்க போலீசார் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News