உள்ளூர் செய்திகள்
மேல்கரைப்பட்டி பகுதியில் நாளை மின்தடை
- பழனியை அடுத்த மேல்கரைப்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- சங்கம்பாளையம், பெரிச்சிபாளையம், சரவணப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
பழனி:
பழனியை அடுத்த மேல்கரைப்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை (4-ந் தேதி ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மேல்கரைப்பட்டி, கீரனூர், கொழுமம்கொண்டான், ஆண்டிநாயக்கன்வலசு, கல்துறை, நால்ரோடு, சந்தன்செட்டிவலசு, சங்கம்பாளையம், பெரிச்சிபாளையம், சரவணப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என பழனி மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது