உள்ளூர் செய்திகள்

தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்

Published On 2023-04-07 09:51 GMT   |   Update On 2023-04-07 09:51 GMT
  • கழிவுகளை இரவு நேரங்களில் தினமும் மூட்டை மூட்டையாக சிலர் எடுத்து சாலையோரங்களில் வீசி செல்கிறார்கள்.
  • மர்ம நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி உள்பட்ட பகுதிகளில் தனியார் மருத்துவமனைகள், கோழி, ஆடு, இறைச்சி கடைகள், மற்றும் முடி திருத்தும் கடைகளில் இருந்து வெளியாகும் கழிவுகளை இரவு நேரங்களில் தினமும் மூட்டை மூட்டையாக சிலர் எடுத்து சாலையோரங்களில் வீசி செல்கிறார்கள். இதனால் மர்ம நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

இதனை சம்மந்தபட்ட ஊராட்சி நிர்வாகிகள் அதிகாரிகள் உடனடியாக இவர்கள் மேல் நடவடிக்கை எடுத்து கழிவுகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News