உள்ளூர் செய்திகள்
கடலூர் முதுநகரில் வெளியில் சென்ற இளம்பெண் மாயம்
- 24 வயது இளம்பெண். சென்னை தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றார். கடந்த 6 மாதமாக வீட்டில் இருந்தபடி வேலை செய்து வருகின்றார்.
- சம்பவத்தன்று வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வெளியில் சென்ற இளம்பெண் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை
கடலூர்:
கடலூர் முதுநகரை சேர்ந்த 24 வயது இளம்பெண். சென்னை தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றார். கடந்த 6 மாதமாக வீட்டில் இருந்தபடி வேலை செய்து வருகின்றார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வெளியில் சென்ற இளம்பெண் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சிடைந்த பெற்றோர் இளம்பெண்ணை தேடினர். எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் துறைமுகம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.