உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சியில் என்ஜினியரிங் கல்லூரி மாணவி மாயம்

Published On 2022-09-09 07:21 GMT   |   Update On 2022-09-09 07:21 GMT
  • இளம் பெண் தனியார் கல்லூரியில் பொறியியல் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
  • சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மைனர் பெண் (வயது 18) இவர் இதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பொறி யியல் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலை யில் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை இதுகுறித்து அவரது தாய் புகார் அளித்துள்ளார்.

இதேபோல் கள்ளக்கு றிச்சி அருகே ஏமப்பேர் பகுதி யைச் சேர்ந்தவர் மாதவன் மகள் கவுசல்யா (வயது 19). இவர் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து மாதவன் புகார் அளித்துள்ளார். மேற்கண்ட புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News