உள்ளூர் செய்திகள்

சென்னையில் 1-ந்தேதி 'டாஸ்மாக்' கடைகள் மூடல்: கலெக்டர் உத்தரவு

Published On 2023-04-28 07:43 IST   |   Update On 2023-04-28 07:43:00 IST
  • அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது.
  • தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை :

சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மே தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்கீழ், சென்னையில் உள்ள அனைத்து 'டாஸ்மாக்' கடைகளும், அனைத்து விதமான 'பார்'களும் வருகிற 1-ந்தேதி (திங்கட்கிழமை) கண்டிப்பாக மூடப்பட வேண்டும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது.

தவறினால் மதுபான விற்பனை விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News