உள்ளூர் செய்திகள்
- 100 அடி உயர அலங்கரிக்கப்பட்ட தேரில், அம்மனை வைத்து மேள,தாளம் முழங்க கிராம வீதிகளில் தேர் இழுத்துச் செல்லப்பட்டது.
- இந்த தேரினை, மாடுகள் இழுத்துச் செல்வது ஆண்டுதோறும் நடைபெறும் சிறப்பம்சமாகும்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக எல்லைப்பகுதியில் உஸ்கூர் கிராமம் உள்ளது. இங்கு மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ மத்தூரம்மா என்ற அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள், 3 நாட்கள் நடைபெற்றன. முதல் நாள் நிகழ்ச்சியாக, மா விளக்கு ஊர்வலம் மற்றும் பூஜையும், தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக, நேற்று முன்தினம்,100 அடி உயர அலங்கரிக்கப்பட்ட தேரில், அம்மனை வைத்து மேள,தாளம் முழங்க கிராம வீதிகளில் தேர் இழுத்துச் செல்லப்பட்டது. இந்த தேரினை, மாடுகள் இழுத்துச் செல்வது ஆண்டுதோறும் நடைபெறும் சிறப்பம்சமாகும். விழாவில், ஓசூர், அத்திப்பள்ளி, ஆனேக்கல், எலக்ட்ரானிக் சிட்டி மற்றும் சுற்று வட்டாரங்களிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவையொட்டி நாட்களும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.