உள்ளூர் செய்திகள்

தருமபுரி காட்டு பகுதியில் பிணமாக தொங்கிய மேஸ்திரி

Published On 2022-12-25 15:38 IST   |   Update On 2022-12-25 15:38:00 IST
  • மரம் ஒன்றில் சரவணன் தூக்கில் பிணமாக தொங்கியது தெரிய வந்தது.
  • சரவணன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சில உறவினர்கள் தெரிவித்தனர்.

தருமபுரி,

தருமபுரியை அடுத்த கொளகத்தூர் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி மகன் சரவணன் (வயது 28).இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். நேற்று வீட்டை விட்டு வெளியே சென்ற சரவணன் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களிலும் தேடி வந்தனர்.

இந்நிலையில் சவுளூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு பின்புறம் உள்ள காட்டு பகுதியில் மரம் ஒன்றில் சரவணன் தூக்கில் பிணமாக தொங்கியது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் சரவணனுக்கும் , அவரது உறவினர் ஒருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகவும் அதன் காரணமாக சரவணன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சில உறவினர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து சரவணன் பிணமாக தொங்கியது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News