உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர். 

சங்கரன்கோவிலில் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

Published On 2023-03-04 07:50 GMT   |   Update On 2023-03-04 07:50 GMT
  • வட்டாரக்குழு உறுப்பினர் சி.கே குமார் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
  • ஆர்ப்பாட்டத்தின் போது கோஷங்கள் எழுப்பப்பட்டது.

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தேரடி திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், தமிழக ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரக்குழு உறுப்பினர் சி.கே குமார் தலைமை தாங்கினார். வெள்ளத்துரை முன்னிலை வகித்தார்.

தென்காசி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்துப்பாண்டியன், சங்கரன்கோவில் தாலுகா செயலாளர் அசோக் ராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசு கண்டித்தும். ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் வட்டார குழு உறுப்பினர் முருகன், சி.ஐ.டி.யு. ரத்தினவேல், தமிழ்நாடு விவசாய சங்கம் ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News