உள்ளூர் செய்திகள்

திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் மளிகை கடைக்காரர் விபத்தில் பலி

Published On 2023-02-19 15:09 IST   |   Update On 2023-02-19 15:09:00 IST
  • கிருஷ்ணாபுரம் கூட்டு ரோடு அருகே பரமசிவம் சென்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி ஒன்று அவர் மீது மோதியது.
  • இதில் சம்பவ இடத்திலேயே பரமசிவம் உயிரிழந்தார்.

மத்தூர், 

திருப்பத்தூர் மாவட்டம், மேற்குவதனவாடி பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 35). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார்.

நேற்று வழக்கம்போல கடை வியாபாரத்தை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி-காவேரிப்பட்டணம் சாலையில் கிருஷ்ணாபுரம் கூட்டு ரோடு அருகே பரமசிவம் சென்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி ஒன்று அவர் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே பரமசிவம் உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்த பரமசிவத்துக்கு திருமணம் ஆகி 4 மாதங்கள்தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

Similar News