உள்ளூர் செய்திகள்

மாணவிகளிடம் சில்மிஷம் செய்தவர் சஸ்பெண்டு: தலைமறைவான ஆசிரியரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை

Published On 2022-07-22 09:36 GMT   |   Update On 2022-07-22 09:36 GMT
  • ஆசிரியர் பன்னீர்செல்வம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.
  • ஆசிரியர் பன்னீர்செல்வத்தை சஸ்பெண்டு செய்ய உத்தரவிட்டார்.

தருமபுரி,

தருமபுரி குமாரசாமிபேட்டையைச் சேர்ந்த 8-வது படிக்கும் மாணவி. இவர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்.

இந்தப் பள்ளியில் பன்னீர்செல்வம் (வயது59) என்பவர் ஆங்கில பாட ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் அந்த மாணவியிடம் கையெழுத்து சரியில்லை என்று கூறி தகாத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதே போல் அந்தப் பள்ளியில் பல மாணவிகளிடம் இயல்பாக பேசுவது போல கன்னங்களை பிடித்துக் கிள்ளுவது உள்ளிட்ட செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதுகுறித்து அந்த மாணவி தருமபுரி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் ஆசிரியர் பன்னீர்செல்வம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.

இதையடுத்து அவரை கைது செய்த ஆசிரியரின் சொந்த ஊருக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை.

மாணவி புகார் கொடுத்த விபரம் தெரியவந்ததும் அவர் தப்பி சென்று தலைமறைவாகி உள்ளார். இதனால் அவரது செல்போன் எண்ணை வைத்து அவர் எங்கு இருக்கிறார் என போலீசார் தேடி வருகின்றனர்.

இது பற்றி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி குணசேகரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனால் அவர் ஆசிரியர் பன்னீர்செல்வத்தை சஸ்பெண்டு செய்ய உத்தரவிட்டார்.

இன்னும் ஒரு வருடத்தில் பன்னீர்செல்வம் ஓய்வு பெற இருக்கிறார். அவர் இந்த சம்பவத்தில் சிக்கி இருப்பது மற்ற ஆசிரியர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News