உள்ளூர் செய்திகள்

மனைவியை கிண்டல் செய்த வாலிபருக்கு கத்திக்குத்து: கைதான தாய்மாமன் சிறையில் அடைப்பு

Published On 2023-08-20 15:20 IST   |   Update On 2023-08-20 15:20:00 IST
  • அங்கு சென்ற சோமசேகர், மாதேஷின் மனைவியை கேலி-கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
  • நீதிமன்ற த்தில் ஆஜர்படுத்தி ஒசூர் சிறையில் அடைத்தனர்.

தேன்கனிக்கோட்டை,  

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே, சந்தனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சோமசேகர் (வயது21). கூலித்தொழிலாளி. இவரது தாய்மாமன் மாதேஷ் (34). இவரது மனைவி, நேற்று முன்தினம் அங்குள்ள கடையில் தயிர் வாங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு சென்ற சோமசேகர், மாதேஷின் மனைவியை கேலி-கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை மாதேஷ் தட்டிக்கேட்டதால், அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர், கைக லப்பாக மாறியது. இதில், ஆத்திரமடைந்த மாதேஷ், கத்தியால் குத்தி யதில் வயிற்றில் காயமடைந்த சோமசேகர், ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

இதை கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில், தேன்க னிக்கோ ட்டை போலீசார் வழக்கு ப்பதிந்து, மாதேஷை கைது செய்தனர்.

என் மனைவியை பொது இடத்தில் கேலி-கிண்டல் செய்ததால் சோமசேகரை தட்டிகேட்டேன். இதனால் இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அதனால் ஆத்திரத்தில் சோமசேகரை கத்தியால் வயிற்று பகுதியில் குத்திவிட்டேன் என பரபரப்பு வாக்குமூலம் அளித்தாக போலீசார் கூறினர். இதையடுத்து நீதிமன்ற த்தில் ஆஜர்படுத்தி ஒசூர் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News