உள்ளூர் செய்திகள்

செல்போன் திருட முயன்றவர் கைது

Published On 2023-09-14 16:42 IST   |   Update On 2023-09-14 16:42:00 IST
  • செல்போனை சார்ஜில் போட்டு விட்டு தூங்கி கொண்டிருந்தார்.
  • செல் போனை திருடியவரை பிடித்து அட்கோ போலீசில் ஒப்படைத்தார்.

ஓசூர்,

ஓசூர் குமுதேப்பள்ளியை சேர்ந்தவர் ஜீவா (வயது 25). தனியார் நிறுவன ஊழியர். இவர் குமுதேப்பள்ளியில் வீட்டில் செல்போனை சார்ஜில் போட்டு விட்டு தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒருவர் இவரது செல் போனை திருட முயன்றார். இதை கவனித்த ஜீவா அவரை பிடித்து அட்கோ போலீசில் ஒப்படைத்தார்.

பிடிபட்டவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் முருகன் (30), திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா சங்கரா புரத்தைச் சேர்ந்தவர் என தெரிய வந்தது அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News