உள்ளூர் செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே மின் மோட்டார் ஒயர்களை திருடியவர் கைது

Published On 2023-05-30 09:05 GMT   |   Update On 2023-05-30 09:05 GMT
  • ஒயர் திருடிக் கொண்டிருந்த குமாரை மக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
  • நீதிபதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த சந்திரமூலசமுத்திரம் கிராமத்தில் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மின் ஒயர்களை அதே ஊரைச் சேர்ந்த குமார் (வயது 38) என்பவர் திருடிக் கொண்டிருந்தபோது அந்த கிராம மக்கள் பிடித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் வழக்கு பதிவு செய்து உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிபதி இவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Tags:    

Similar News