உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே 2 பெண்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

Published On 2023-05-27 08:11 GMT   |   Update On 2023-05-27 08:11 GMT
  • பண்ருட்டி அருகே 2 பெண்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
  • காயமடைந்த இருவரும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

கடலூர்:

பண்ருட்டி அடுத்த பனப்பாக்கத்தை சேர்ந்தவர்வெள்ளிகண்ணு (48)இவருக்கும்அதே ஊரை சேர்ந்த மோகனுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனைஇருந்துவந்தது. சம்பவத்தன்று மோகன், அவரது மகன் தன்ராஜ்,மனைவி காஞ்சனா ஆகியோர் ஒன்றுசேர்ந்து வெள்ளிக்கண்ணு வீட்டிற்கு சென்று வெள்ளிகண்ணுவின் மனைவி மல்லிகாமற்றும்ளி களியம்மாள்ஆகியோரை உருட்டு கட்டை மற்றும் இரும்பு கம்பியால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார்சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மோகன் அவரது மகன், மனைவி ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து மோகனை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்திசிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News