உள்ளூர் செய்திகள்

மின் கையெழுத்து சான்றிதழில் முறைகேடு

Published On 2023-02-21 14:21 IST   |   Update On 2023-02-21 14:21:00 IST
  • டிஜிட்டல் சிக்னேச்சர் சர்டிபிகேட்டில் முறைகேடு நடந்துள்ளது.
  • உண்மை தன்மையையை கண்டறிந்து இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் மிட்டாநூல அள்ளியை அடுத்த எர்மதானாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன்.

இவர் முக்கல் நாயக்கம்பட்டி பஞ்சாயத்து துணைத்தலைவராக இருந்து வருகிறார்.

கலெக்டரிடம் ஜெகநாதன் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

முக்கல் நாயக்கன் பட்டியில் ஊராட்சி துணைத் தலைவராக உள்ளேன். தனிப்பட்ட முறையில் ஊராட்சிக்காக தரப்பட்ட டிஜிட்டல் சிக்னேச்சர் சர்டிபிகேட்டில் முறைகேடு நடந்துள்ளது.

என்னை அறியாமல் இதில் பணம் பரிவர்த்தனை நடந்துள்ளது. இதன் உண்மை தன்மையையை கண்டறிந்து இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News