உள்ளூர் செய்திகள்

செழித்து வளர்ந்த சோளப்பயிர்கள்.

நிலக்கோட்டை பகுதியில் செழித்து வளர்ந்த சோளம்

Published On 2023-10-25 12:57 IST   |   Update On 2023-10-25 12:57:00 IST
  • மானாவாரிப் பயிர்கள் விளையும் அளவுக்கு கூட மழை பெய்யுமா? என்ற வகையில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது.
  • இந்த நிலையில் அவ்வபோது பரவலாக மழை பெய்ததால் கம்பு, சோளம் உள்ளிட்ட பயிர்கள் நன்றாக வளர்ச்சி அடைந்தது.

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சாரல் மழை பெய்தது. இந்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் மற்றும் கால்நடை வைத்திருப்போர் தங்களது நிலங்களில் கம்பு, சோளம்,எள்ளு, தட்டாம் பயிறு, பாசிப்பயிறு, துவரம் பயறு உள்ளிட்ட மானாவாரி பயிர்களை சாகுபடி செய்தனர்.

அவ்வாறு செய்த மானாவாரிப் பயிர்கள் விளையும் அளவுக்கு கூட மழை பெய்யுமா? என்ற வகையில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இந்த நிலையில் அவ்வபோது பரவலாக மழை பெய்ததால் கம்பு, சோளம் உள்ளிட்ட பயிர்கள் நன்றாக வளர்ச்சி அடைந்தது.

இதன் காரணமாக கால்நடைகளுக்கு தேவையான கம்பு, சோளம்,புல் உள்ளிட்ட பல்வேறு தீவனங்கள் நன்றாக வளர்ந்ததால் விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News