உள்ளூர் செய்திகள்

உலக நலன்வேண்டி மகா ருத்ரயாகம் நடைபெற்றது.

உலக மக்கள் நன்மைக்காக மகா ருத்ரயாகம்

Published On 2023-10-08 15:37 IST   |   Update On 2023-10-08 15:37:00 IST
  • காவிரியில் தண்ணீர் வரவேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும்.
  • நவக்கிரக பூஜை, சிறப்பு ருத்ர ஜப ஹோமம், ஆயுஷ் ஹோமம் மற்றும் லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்தனர்.

சுவாமிமலை:

கும்பகோணம் மேலக்காவேரி தனியார் திருமண மண்டபத்தில் துரைதலைமையில் உலக நலன் வேண்டி மகாளய பட்ச பருவத்தில் வேதபாராயண சத்சங்கம், சிறப்பு ருத்ர ஹோமம் மற்றும் லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடந்தது.

இந்த ருத்ர ஜப ஹோமத்தில் காவிரியில் தண்ணீர் வரவேண்டும்.

விவசாயம் செழிக்க வேண்டும். உலக மக்கள் நோய் நொடியின்றி வாழ வேண்டும் என்று உலக நலன்வேண்டி 100-க்கும் மேற்பட்ட வேதபண்டிதர்கள் கலந்துகொண்டு கோபூஜை, கணபதி பூஜை, நவக்கிரக பூஜை, சிறப்பு ருத்ர ஜப ஹோமம், ஆயுஷ் ஹோமம் மற்றும் லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்தனர்.

இதில் குடந்தை மற்றும் சென்னையை சேர்ந்த ஆச்சாரியார்கள், வேதபட்டிதர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News