உள்ளூர் செய்திகள்

பெரியார் பஸ் நிலையத்தில் மணிபர்சை திருடிய பெண்

Published On 2022-11-19 14:29 IST   |   Update On 2022-11-19 14:29:00 IST
  • பெரியார் பஸ் நிலையத்தில் ராணுவ வீரர் மனைவியிடம் மணிபர்சை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
  • ரூ.2,200 அடங்கிய மணி பர்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை

மதுரை கே.புளியங்குளம், மேலத்தெருவை சேர்ந்தவர் வெற்றிமாறன். ராணுவ வீரர். இவரது மனைவி பிரேமலதா (வயது 32). இவர் நேற்று காலை மதுரைக்கு வந்திருந்தார்.

பின்னர் ஊருக்கு செல்வதற்காக பெரியார் பஸ் நிலைய 3-வது பிளாட்பாரத்தில் காத்திருந்தார். அங்கு பதுங்கியிருந்த பெண், பிரேமலதா வைத்திருந்த மணிபர்சை பறித்துக்கொண்டு தப்பி முயன்றார்.

பிரேமலதா, 'திருடி, திருடி' என்று கூச்சல் போட்டார். அப்போது திடீர்நகர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் லோகே ஸ்வரி தற்செயலாக பெரியார் பஸ் நிலையத்துக்கு வந்திருந்தார். பிரேமலதாவின் கூச்சலை கேட்டதும் அவர் சக போலீசாருடன் தப்பி ஓடிய பெண்ணை மடக்கி பிடித்தார்.

அந்த பெண்ணிடம் இருந்து ரூ.2,200 அடங்கிய மணி பர்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் அந்த பெண்ணை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர் உசிலம்பட்டி, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அய்யப்பன் மனைவி காந்தி என்ற லட்சுமி (28) என்பது தெரிய வந்தது.

இவர் மீது வழிப்பறி செய்ததாக திடீர் நகர் போலீஸ் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு போலீசிடம் சிக்கி சிறைக்கு சென்றார். அதன் பிறகு ஜாமீனில் வந்த லட்சுமி மீண்டும் பெரியார் பஸ் நிலையத்தில் ராணுவ வீரர் மனைவியிடம் மணிபர்சை திருடியபோது போலீசில் சிக்கினார்.

அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News