உள்ளூர் செய்திகள்

மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.

சார்பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்வதை எதிர்த்து கிராம மக்கள் மறியல்

Published On 2022-12-28 07:56 GMT   |   Update On 2022-12-28 07:56 GMT
  • திருமங்கலம் அருகே சார்பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்வதை எதிர்த்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
  • சிந்துபட்டி சுற்றுவட்டார கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருமங்கலம்

திருமங்கலம் அருகே உள்ள சிந்துபட்டி கிரா மத்தில் 1914 -ம் ஆண்டு முதல் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதனால் அருகில் உள்ள தும்மக்குண்டு, காங்கே யநத்தம், நக்கலகோட்டை, பன்னீர்குண்டு, காளப்பன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

தற்போது தமிழக அரசு பத்திரப்பதிவு அலுவ லகங்களை தாலுகா வாரியாக பிரிக்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. தாலுகா வாரியாக பத்திர பதிவு அலுவலகம் பிரிக்கப்படும் சூழ்நிலையில் சிந்து பட்டியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து வந்த திருமங்கலம் தாலுகாவுக்கு காங்கேயநத்தம், நக்க லக்கோட்டை, பன்னீர் குண்டு, பொக்கம்பட்டி, தங்களாசேரி, சென்ன ம்பட்டி உள்ளிட்ட கிராம பஞ்சாயத்துக்கள் திருமங்கலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும், இதுவரை செயல்பட்டு வந்த சிந்துபட்டி சார்பதிவாளர் அலுவலகம் செல்ல ம்பட்டிக்கு இடமாற்றம் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதனால் சிந்துபட்டி, உடையாம்பட்டி, கட்ட தேவன்பட்டி, தும்மக்குண்டு, காளப்பன்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் பத்திர பதிவு செய்வதற்கு செல்ல ம்பட்டிக்கு செல்ல வேண்டும்.

இந்த நடைமுறைக்கு மேற்கண்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். செல்லம்பட்டிக்கு இட மாற்றம் செய்வதால் பொது மக்களுக்கு போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் இருப்பதாகவும், சிந்துபட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தை இடமாற்றம் செய்யக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்து கடந்த வாரம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிந்துபட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தை இடமாற்றம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிந்துபட்டி சுற்றுவட்டார கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News