உள்ளூர் செய்திகள்

தருமிக்கு பொற்கிழி வழங்கிய கோலத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் காட்சியளித்தார்.

மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று தருமிக்கு பொற்கிழி வழங்கிய லீலை

Published On 2022-09-01 09:01 GMT   |   Update On 2022-09-01 09:01 GMT
  • ஆவணி மூல திருவிழாவில் மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று தருமிக்கு பொற்கிழி வழங்கிய லீலை நடந்தது.
  • வருகிற 9-ந் தேதி வரை திருவிழா நடக்கிறது

மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா நடந்து வருகிறது. அப்போது சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில், 12 லீலைகள் அரங்கேற்றம் செய்யப்படும். நேற்று ''மாணிக்கம் விற்ற லீலை'' நடந்தது.

4-ம் நாளான இன்று ''தருமிக்கு பொற்கிழி வழங்கிய லீலை'' நடந்தது. இதையொட்டி மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரருக்கு சிறப்பு அலங்காரம்- அபிஷேகம் நடந்தது. அதன் பிறகு சுவாமி தம்பதி சமேதராக ராமசாமி பிள்ளை மண்டபம், தெற்கு ஆவணி மூல வீதி, சித்திரை வீதி, கீழ பட்டமார் தெரு, வடக்கு ஆவணி மூல வீதி வழியாக கோவிலை வந்தடைந்தது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த மாதம் 23-ந் தேதி ஆவணி மூலத் திருவிழா தொடங்கியது. வருகிற 9-ந் தேதி வரை திருவிழா நடக்கிறது. கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக ஆவணி மூல திருவிழா நடக்கவில்லை.

இந்த நிலையில் பக்தர்களின் பங்களிப்புடன் ஆவணி மூலத் திருவிழா தற்போது நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News