உள்ளூர் செய்திகள்

சிகிச்சை பெற்ற பெண் சாவு

Published On 2023-05-18 13:56 IST   |   Update On 2023-05-18 13:56:00 IST
  • சிகிச்சை பெற்று வந்த ஆதரவற்ற பெண் இறந்தார்.
  • பெண் பற்றி யாருக்கும் தகவல் தெரிந்தால் மதுரை திலகர் திடல் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம்.

மதுரை

மதுரையில் ராஜா மில்ரோடு மகாதேவர் சுவாமி கோவில் அருகில் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த ஒரு பெண்ணை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்து விட்டார். அவரது உடல் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. போலீசாரின் விசாரணையில், அவரது பெயர் ஆரோக்கியமேரி (வயது48 )என்று தெரியவந்துள்ளது. ஆதரவற்ற அந்த பெண் பற்றி யாருக்கும் தகவல் தெரிந்தால் மதுரை திலகர் திடல் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம்.

Tags:    

Similar News