உள்ளூர் செய்திகள்

வாடிப்பட்டி அருகே வயல் வெளியில் பிணத்தை தூக்கி செல்கின்றனர்.

வயல்வெளியில் பிணத்தை தூக்கிச் செல்லும் அவலம்

Published On 2023-02-12 08:35 GMT   |   Update On 2023-02-12 08:35 GMT
  • வயல்வெளியில் பிணத்தை தூக்கிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
  • விரைவாக பாலம் கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி, மேல் நாச்சிகுளம், கீழ் நாச்சிகுளம், கரட்டுப்பட்டி ஆகிய கிராமங்களில் வசிக்கும் ஒரு சமுதாயத்திற்கு தனி சுடுகாடு உள்ளது.

இந்த சுடுகாடு கோட்டை மேடு-நரிமேடு 2 கிராமங்களுக்கும் மைய பகுதியில் அமைந்துள்ளது. இந்த சுடுகாட்டுக்கு செல்ல முன்பு பெரியாறு பாசன கிளை கால்வாய் வழியாக படிக்கட்டு அமைக்கப்பட்டிருந்தது. அதையொட்டி உள்ள கரை ஓரமாக சென்று மயானத்திற்கு சென்று வந்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கிளை கால்வாய் அகலப்படுத்தப்பட்ட போது படிக்கட்டுகள் இருந்த இடத்தில் மீண்டும் படிக்கட்டு அமைக்காமல் சமதளமாக பூசி விட்டனர்.இதனால் மயானத்திற்கு செல்லும் வழி தடைபட்டது.

தற்போது நரிமேடு சாலை வழியாக வயல்வெளியில் பிணத்தை தூக்கி செல்ல வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து மதுரை மாவட்ட கலெக்டருக்கு மனு கொடுத்து பொதுப்பணித்துறை மூலம் சிறுபாலம் அமைக்க உத்தரவு பெறப்பட்ட பிறகும் பாலம் கட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த அவல நிலை தொடராமல் இருக்க விரைவாக பாலம் கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News