உள்ளூர் செய்திகள்

சுந்தரராஜ பெருமாள் திருக்கல்யாணம்

Published On 2023-03-24 13:31 IST   |   Update On 2023-03-24 13:31:00 IST
  • கள்ளழகர் கோவில் சுந்தரராஜ பெருமாள் திருக்கல்யாணம் வருகிற 5-ந் தேதி நடக்கிறது.
  • விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

மதுரை

108 வைணவ தேசங்களில் ஒன்றான அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் திருக்கல்யாண திருவிழா விமரிசையாக நடை பெறும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான விழா வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று மாலை 6 மணிக்கு கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி- பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளுகிறார். விழா நடக்கும் 5 நாட்களும் தினமும் காலை, மாலை சுவாமி -அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர் களுக்கு காட்சியளிக்கின்ற னர்.

சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகிற 5-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. அன்றைய நாள் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறு கின்றன. காலை 7 மணி முதல் 7.30 மணிக்குள் கள்ளழகர் தோளுக்கினி யான் அலங்காரத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளுகிறார். பின்னர் 9.50 மணியில் இருந்து 10 20 மணிக்குள் சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி -பூதேவி, கல்யாண சுந்தரவல்லி தாயார் மற்றும் ஆண்டாள் ஆகியோரை திருமணம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

அன்று இரவு மணக்கோலத்தில் சுவாமி அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக் கிறார்கள். 6-ந் தேதி மஞ்சள் நீர் சாற்று முறையுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News