உள்ளூர் செய்திகள்

ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

Published On 2023-03-29 08:25 GMT   |   Update On 2023-03-29 08:25 GMT
  • ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
  • சோழவந்தான் பேரூர் வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சோழவந்தான்

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கடந்த ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை ஆதரித்தும், பொதுச் செயலாளராக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை முன்னிட்டும் ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

முன்னதாக ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, பேரூர் செயலாளர் முருகேசன், மாவட்ட கவுன்சிலர் ஜெயக்குமார், மகளிரணி மாவட்ட செயலாளர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொதுக்குழு உறுப்பினர் நாகராஜ், சோழவந்தான் 10-வது வார்டு செயலாளர் மணிகண்டன், மருத்துவர் அணி கருப்பட்டி டாக்டர் கருப்பையா, ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பட்டி தங்கபாண்டி, நாச்சிகுளம் தங்கபாண்டி, தென்கரை ராமலிங்கம், சோழவந்தான் பேரூர் கவுன்சிலர்கள் வசந்தி கணேசன், ரேகா ராமச்சந்திரன், சரண்யா கண்ணன், சண்முக பாண்டியன், மன்னாடிமங்கலம், தெற்கு கிளை செயலாளர் ராஜபாண்டி, சோழவந்தான் பேரூர் துணைச்செயலாளர் தியாகு, நகர இளைஞரணி கேபிள் மணி, சோழவந்தான் பேரூர் வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News