உள்ளூர் செய்திகள்

கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

Published On 2023-01-01 08:09 GMT   |   Update On 2023-01-01 08:09 GMT
  • கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
  • 2023 புத்தாண்டு சிறப்பு திருப்பலி, ஆராதனைகளும் நடந்தன.

மதுரை

மதுரை மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் நள்ளிரவு திருப்பலி, ஆராதனை நடந்தது. புதூர் புனித லூர்தன்னை ஆலயத்தில் மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி புத்தாண்டு சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார்.

ஞான ஒளிவுபுரம் புனித வளனார் ஆலயம், கூடல்நகர் தூய திரித்துவ ஆலயம், இடைவிடா சகாய அன்னை ஆலயம், அண்ணாநகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயம், பாஸ்டின்நகர் தூய பவுல் ஆலயம், விளாங்குடி செங்கோல் நகர் கிறிஸ்து அரசர் ஆலயம், டவுன்ஹால் ரோடு தூய ஜெபமாலை அன்னை ஆலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் பங்குத்தந்தையர்கள் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நிறைவேற்றினர். சி.எஸ்.ஐ. லுத்ரன் திருச்சபை, அசெம்பிளி ஆப் காட் திருச்சபை, எச்.எம்.எஸ். காலனி புதிய ஜீவிய சபை, பைபாஸ் ரோட்டில் உள்ள ஏசு அழைக்கிறார். ஜெபகோபுரம் உள்ளிட்ட அனைத்து சபைகளிலும் இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 2022-ம் ஆண்டின் நன்மைகளுக்காக நன்றி வழிபாடும், அதன் பிறகு 2023 புத்தாண்டு சிறப்பு திருப்பலி, ஆராதனைகளும் நடந்தன.

இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். ஒருவருக்கொ ருவர் வாழ்த்து கூறி மகிழ்வை பகிர்ந்து கொண்டனர். மதுரை கோரிப்பாளையம், நெல்பேட்டை உள்பட அனைத்து பள்ளிவாசல் களிலும் இஸ்லாமியர்கள் புத்தாண்டு சிறப்பாக இருக்க வேண்டி சிறப்பு தொழுகை நடத்தினர்.

Tags:    

Similar News