உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவி 'திடீர்' மாயம்

Published On 2023-05-18 08:16 GMT   |   Update On 2023-05-18 08:16 GMT
  • மதுரை அருகே பள்ளி மாணவி திடீரென மாயமானார்.
  • சிந்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து மாணவியை தேடி வருகின்றனர்.

திருமங்கலம்

மதுரை பி.பி.குளம் பகுதியை சேர்ந்தவர் அறிவ ழகன். இவரது மனைவி நந்தினி. இவர்களது மகள் பிரியதர்ஷினி (வயது15) மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

தற்போது பள்ளி விடுமுறை என்பதால் சிந்துப்பட்டி போலீஸ் சரகத்தில் இருக்கும் வி.கள்ளப்பட்டியில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு தாயுடன் சென்றிருந்தார். சம்பவத்தன்று உசிலம் பட்டியில் உள்ள தோழி வீட்டிற்கு சென்று வருவதாக தாயிடம் கூறிவிட்டு சென்றார்.

ஆனால் அதன்பிறகு பிரியதர்ஷினி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. மாயமான அவரை அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்க ளில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்க வில்லை. இதனால் தனது மகள் மாயமானது குறித்து சிந்துப்பட்டி போலீஸ் நிலையத்தில் நந்தினி புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாணவி பிரியதர்ஷினியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News