ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. நிவாரண உதவி
- ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. நிவாரண உதவி வழங்கினார்.
- கனமழை காரணமாக 20-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடி கிராம த்தில் கனமழை காரணமாக 20-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன.வீடுகள் இடிந்து தவிக்கும் மக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. தலைமையில் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சாத்தங்குடி கிராமத்தில் மழையால் வீடுகளை இழந்த 20-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு. காய்கறி மற்றும் நிவாரண நிதியை ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. வழங்கி ஆறுதல் கூறினார்.
இதில் அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் திருப்பதி, ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாவட்ட பேரவை செயலாளர் தமிழழகன், மாநில சார்பு அணி நிர்வாகிகள் வெற்றிவேல், சிவசுப்பிரமணி, யூனியன் சேர்மன் லதா ஜெகன், நிர்வாகிகள் சுகுமார், சாமிநாதன், பேரவை பாண்டி, வாகைகுளம் சிவசக்தி, ஆண்டிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.