உள்ளூர் செய்திகள்

ரத்ததான முகாம்-நலத்திட்ட உதவிகள்

Published On 2023-06-20 08:33 GMT   |   Update On 2023-06-20 08:33 GMT
  • ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம்-நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
  • இந்த முகாமை மாணிக்கம்தாகூர் எம்.பி. தொடங்கி வைத்தார்

திருப்பரங்குன்றம்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு மதுரை திருநகரில் உள்ள விருதுநகர் எம்.பி. அலுவலகத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை மாணிக்கம் தாகூர் எம்.பி. வழங்கினார்.

தொடர்ந்து நடந்த ரத்த தான முகாமை அவர் தொடங்கி வைத்தார். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.பி.எஸ்.பழனிகுமார், ராஜ்குமார் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், பகுதி தலைவர் நாகேசு வரன், வட்டார தலைவர் காசிநாதன் மற்றும் நிர்வாகிகள் முத்து வேல், சவுந்தர பாண்டி, வித்யாபதி, சத்யன், சரவணபவன், தங்க ராஜா, பழனிகுமார், மலைராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News