உள்ளூர் செய்திகள்

ரெயில் சோதனை ஓட்டம்

Published On 2022-09-13 08:13 GMT   |   Update On 2022-09-13 08:13 GMT
  • திண்டுக்கல்-பழனி மின் பாதையில் ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது.
  • மதுரை கூடுதல் கோட்ட ெரயில்வே மேலாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மதுரை

திண்டுக்கல்-பழனி இடையே 58 கி.மீ. தூரத்திற்கு ரெயில் பாதையில் மின்மயமாக்கும் பணிகள் முடிந்து விட்டன.

இந்த ரெயில் பாதையில் இன்று (13-ந் தேதி) முதன்மை தலைமை மின் பொறியாளர் சித்தார்த் ஆய்வு செய்தார். அவருடன் முதன்மை மின்மயமாக்கல் இயக்குனர் சமீர் டிஹே, முதன்மை சைகை பொறியாளர் சுனில், முதன்மை மின் பகிர்மான பொறியாளர் சுரேந்திரன், மதுரை கூடுதல் கோட்ட ெரயில்வே மேலாளர் தண்ணீரு ரமேஷ் பாபு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திண்டுக்கல்-பழனி இடையே சிறப்பு ரெயில் மூலம் ஆய்வு நடந்தது. இதனைத்தொடர்ந்து சிறப்பு ரெயிலில் மின்சார என்ஜின் பொருத்தப்பட்டு மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை சோதனை ஓட்டம் நடந்தது.

Tags:    

Similar News