உள்ளூர் செய்திகள்
- சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள சிவன் கோவிலில் கார்த்திகை மாத சோமவார பிரதோஷ விழா நடந்தது.
- அரிமா சங்க தலைவர் டாக்டர் மருதுபாண்டியன் உள்பட பிரதோஷ கமிட்டியினர் செய்திருந்தனர்.
சோழவந்தான்
சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாத சுவாமி சிவன் கோவிலில் கார்த்திகை மாத சோமவார பிரதோஷ விழா நடந்தது. சனீஸ்வர லிங்கம், நந்திகேசுவரர், சிவனுக்கு பால், தயிர் உட்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது. சுவாமியும், அம்மனும் ரிஷப வாகனத்தில் கோவிலை சுற்றி வலம் வந்தனர். இதற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க. மாநில விவசாய அணி துணைத்தலைவர் மணி முத்தையா, பள்ளி நிர்வாகி வள்ளிமயில், சோழவந்தான் அரிமா சங்க தலைவர் டாக்டர் மருதுபாண்டியன் உள்பட பிரதோஷ கமிட்டியினர் செய்திருந்தனர். ரவிச்சந்திர பட்டர், பரசுராம் சிவாச்சாரியார் ஆகியோர் பூஜைகள் செய்தனர். பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.