உள்ளூர் செய்திகள்

நீர்மோர் பந்தல் திறப்பு

Published On 2023-04-11 08:40 GMT   |   Update On 2023-04-11 08:40 GMT
  • திருமங்கலம் நகர தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.
  • நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருமங்கலம்

திருமங்கலம் நகர தி.மு.க. சார்பில் பஸ் நிலையம் அருகில் நீர்மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், தர்ப்பூசணி உள்ளிட்ட 16 வகையான பழங்களை மண் குவளையில் வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார்.

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டி, நகர செயலாளர் ஸ்ரீதர், நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதியமான், மாவட்ட துணைச் செயலாளர் முத்துராமன், லதா அதியமான், ஒன்றிய செயலாளர் தனபாண்டியன், மதன்குமார், பாண்டியன், தனசேகரன், கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், சின்னசாமி, காசிபாண்டி, வினோத், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News