உள்ளூர் செய்திகள்

கார் மோதி முதியவர் பலி

Published On 2023-06-17 15:07 IST   |   Update On 2023-06-17 15:07:00 IST
  • கார் மோதி முதியவர் பலியானார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர்? என்று விசாரித்து வருகின்றனர்.

மதுரை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கே.கே.நகர் 2-வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் சுதாகர் (51). இவர் மதுரைக்கு நான்கு வழி சாலையில் காரில் வந்து கொண்டிருந்தார். மதுரை ஐேகார்ட்டு பின்புறம் உள்ள பகுதியில் வந்தபோது, 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் சாலையை கடக்க முயன்றார். எதிர்பாராத விதமாக கார் அவர் மீது மோதியது. இதனால் அந்த முதியவர் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த விபத்து குறித்து ஒத்தக்கடை கிராம நிர்வாக அதிகாரி ரேவதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர்? என்று விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News