உள்ளூர் செய்திகள்
- உசிலம்பட்டி அருகே இன்று நடந்த கார் மோதி மூதாட்டி-பசு மாடு பலியாயினர்.
- இன்று பிற்பகல் 12 மணியளவில் பசு மாட்டை மேச்சலுக்கு அழைத்து சென்றபோது இந்த விபத்து நடந்தது.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள நக்கலப்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சிதம் (வயது65). இவர் இன்று பிற்பகல் 12 மணியளவில் பசு மாட்டை மேச்சலுக்கு அழைத்து சென்றார்.
நக்கலப்பட்டி பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது மதுரையில் இருந்து தேனி நோக்கி வேமாக சென்ற கார் எதிர்பாராத விதமாக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ரஞ்சிதம், பசுமாட்டின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரஞ்சிதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த பசுமாடு சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தது.
விபத்து தொடர்பாக தகவலறிந்த உசிலம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.