உள்ளூர் செய்திகள்

வலையபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.

ஊராட்சி நடுநிலைப்பள்ளிக்கு ரூ.31 லட்சம் மதிப்பில் புதிய கட்டிட பூமிபூஜை

Published On 2023-02-06 08:04 GMT   |   Update On 2023-02-06 08:04 GMT
  • பாலமேடு அருகே ஊராட்சி நடுநிலைப்பள்ளிக்கு ரூ.31 லட்சம் மதிப்பில் புதிய கட்டிட பூமிபூஜை நடந்தது.
  • அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் வலையபட்டி பள்ளிக்கு ஸ்மார்ட் டி.வி. வழங்கி தொடங்கி வைக்கப்பட்டது.

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வலையபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.30.82 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் பஞ்சு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வள்ளி, பாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி இதயச்சந்திரன், வாட்டார கல்வி அலுவலர்கள் ஆஷா, ஜெஷிந்தா, தலைமை ஆசிரியர் ஞானசேகரன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரமேஷ்ராஜா, இல்லம் தேவி கல்வி ஒன்றிய பொறுப்பாளர் சுதாகர், ஒப்பந்ததாரர் கண்ணன் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற கலை திருவிழாவில் மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவில் வலையபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவர்கள் பல்வேறு பரிசுகளை பெற்றனர். அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக நமக்கு நாமே திட்டத்தின் மூலம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் வலைய பட்டி பள்ளிக்கு ஸ்மார்ட் டி.வி. வழங்கி தொடங்கி வைக்கப்பட்டது.

Tags:    

Similar News