உள்ளூர் செய்திகள்
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 7½ லட்சம் மோசடி
- அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 7½ லட்சம் மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
- புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மதுரை
சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சக்திவேல் மகள் ஸ்ரீ துர்கா (23). இவரிடம் புதூர் கொடிக்குளம் தனலட்சுமி நகரை சேர்ந்த முத்துக்குமார் (50) அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். அவரது பேச்சை நம்பிய துர்கா ரூ. 11 லட்சம் கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட முத்துக்குமார் வாக்குறுதி அளித்தபடி வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். அதில் ரூ. 3 லட்சத்து 50 ஆயிரத்தை மட்டும் திருப்பி கொடுத்தார். சில நாட்கள் கழித்து மீதி பணத்தை கேட்டபோது முத்துகுமார் தராமல் குடும்பத்துடன் துர்காவை மிரட்டினார். இது குறித்து புகாரின்பேரில் புதூர் போலீசார் முத்துக்குமார், அவரது மனைவி பிரபா, மகன் ஸ்ரீஹரி, மருமகன் சுரேந்தர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் முத்துக்குமார் கைது செய்யப்பட்டார்.