உள்ளூர் செய்திகள்

மதுரை தலைமை தபால் நிலையத்தில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை

Published On 2023-03-01 09:06 GMT   |   Update On 2023-03-01 09:06 GMT
  • மதுரை தலைமை தபால் நிலையத்தில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர் கைது செய்யப்பட்டார்.
  • இந்த சம்பவம் குறித்து தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

மதுரை

மதுரை தலைமை தபால் நிலையத்தில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மற்றொரு ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

பசுமலை புது அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது59). இவர் மதுரை மீனாட்சி பஜார் தலைமை தபால் அலுவலகத்தில் எம்.டி.எஸ். பிரிவில் வேலை பார்த்து வருகிறார். இதே அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண் ஊழியரை பத்மநாபன் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்தார். பெண் ஊழியர் பலமுறை அவரை எச்சரித்தும் கேட்கவில்லை.

பத்மநாபன் தொடர்ந்து பெண் ஊழியரிடம் தொல்லை செய்து வந்துள்ளார். மனமுடைந்த பெண் ஊழியர் இந்த சம்பவம் குறித்து தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மற்றொரு ஊழியர் பத்மநாபனை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News