உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

Published On 2022-12-18 14:34 IST   |   Update On 2022-12-18 14:34:00 IST
  • விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
  • விவசாயி ஜெகத்ரட்சகன் நன்றி கூறினார்.

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயி கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தாசில்தார் வீரபத்திரன் தலைமை தாங்கினார். துணை தாசில்தார் வனிதா, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பாண்டிய கீர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் அசோக்குமார் வரவேற்றார்.

இந்த கூட்டத்தில் பெரியார் பாசன கால்வா யில் இருந்து கிளை கால் வாய் அமைத்து சாத்தியார் அணையுடன் இணைக்க வேண்டும், அணையை தூர்வாரி ஆழப்படுத்தி விரிவு படுத்த வேண்டும், வெளியூர் பஸ்கள் வாடிப்பட்டி பஸ் நிலையத்தை புறக்கணித்து புறவழிச்சாலையில் செல்லும் ஓட்டுநர், நடத்து னர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், வாடிப்பட்டி பகுதியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரியும், குலசேகரன் கோட்டை பிரிவிலிருந்து மீனாட்சி அம்மன் கோவில் வரை சாலையை சீரமைக்க கோரியும் மனுக்கள் கொடுக்கப்பட்டது. முடிவில் விவசாயி ஜெகத்ரட்சகன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News