உள்ளூர் செய்திகள்

பட்டய பயிற்சியில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

Published On 2022-08-05 09:10 GMT   |   Update On 2022-08-05 09:10 GMT
  • பட்டய பயிற்சியில் சேர கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
  • மேற்கண்ட தகவலை மதுரை பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை நிலைய துணைப்பதிவாளர்-முதல்வர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மதுரை

மதுரை பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022-23-ம் ஆண்டுக்கான கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வருகிற 18-ந் தேதி வரை நேரில் பெற்றுக் கொள்ள கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பத்தின் விலை ரூ.100 ஆகும். பிளஸ்-2 தேர்்ச்சி பெற்று 1.8.2022 அன்று 17 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 22-ந் தேதிக்குள் பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு கிடைக்குமாறு கூரியர் அல்லது பதிவு தபாலில் மட்டும் அனுப்ப வேண்டும். எக்காரணம் கொண்டும் நேரடி விண்ணப்பங்கள் பெறப்படமாட்டாது. மேற்கண்ட தகவலை மதுரை பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை நிலைய துணைப்பதிவாளர்-முதல்வர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று இந்த கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் கூட்டுறவு பட்டய பயிற்சி பெறாத நிரந்தர பணியாளர்களுக்கு 22-வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி தொடங்கி பயிற்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் சேர பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பம் வழங்குவதற்கு வருகிற 12-ந் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News