மதுரை- கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நீட்டிப்பு
- திருவண்ணாமலை, திருப்பதி வழியாக மதுரை- கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.
மதுரை
மதுரை- கச்சிகுடா இடையேயான வாராந்திர சிறப்பு ரெயில், டிசம்பர் மாதம் வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த சேவை ஜனவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கச்சிகுடாவில் இருந்து வருகிற 7-ந் தேதி முதல் ஜனவரி 30-ந் தேதி வரை திங்கட்கிழமைகளில் இரவு 8.50 மணிக்கு புறப்படும் ரெயில், அடுத்தநாள் இரவு 8.45 மணிக்கு மதுரை வரும். மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து வருகிற 9-ந் தேதி முதல் பிப்ரவரி 1-ந் தேதி வரை புதன் கிழமைகளில் அதிகாலை 5.30 மணிக்கு புறப்படும் ரெயில் அடுத்தநாள் காலை 7.05 மணிக்கு கச்சிகுடா செல்லும். இந்த ரெயில்கள் திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், விருத்தாசலம், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், பாபட்லா, தெனாலி, குண்டூர், மிரியால்குடா, நளகொண்டா, மல்காஜ்கிரி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
எர்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையேயான வாராந்திர ரெயில் சேவை நவம்பரில் இருந்து டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
எர்ணாகுளத்தில் இருந்து வருகிற 19-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை சனிக்கிழமைகளில் மதியம் 12.35 மணிக்கு புறப்படும் ரெயில் அடுத்த நாள் அதிகாலை 5.45 மணிக்கு வேளாங்கண்ணி செல்லும். மறு மார்க்கத்தில் வேளாங்கண்ணியில் இருந்து வருகிற 20-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.35 மணிக்கு புறப்படும் ரெயில் அடுத்த நாள் மதியம் 12 மணிக்கு எர்ணாகுளம் செல்லும். இந்த ரெயில்கள் கோட்டயம், செங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, காயங்குளம், கருநாகப்பள்ளி, சாஸ்தான்கோட்டா, கொல்லம், குண்டரா, கொட்டாரக்கரா, அவனீஸ்வரம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினத்தில் நின்று செல்லும்.மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.